பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.