பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையை அமைப்பதற்கான உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

இன்று காலை சங்கானை பிரதேச செயலகத்தில் வைத்து கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், உதவி பிரதேச செயலர் மற்றும் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் அ.கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலை அதிபரிடம் ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர்.