வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தை பிறப்பிடமாகவும் தவசிகுளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் பரமசிவம் அவர்களின் அன்புச் சகோதரனுமாகிய சுக்கிரன் சின்னசாமி (தவசிகுளம் பாலவினாயகர் ஆலயத் தலைவர்) அவர்கள் (15/12/2021) நேற்று காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)