வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் புதிய குடி நீர் இணைப்பிற்காகவும், உள்ளக அபிவிருத்திக்கு என விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக புளொட் அமைப்பின் கனடா செயற்பாட்டாளர் தோழர் ராஜ் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு தோழர் ராஜ் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முப்பதினாயிரம் ரூபாவினை
(ரூபா 30 000/-) புளொட் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களினால் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புளொட் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன், மத்திய குழு உறுப்பினர் தோழர் ரவி மற்றும் தோழர் முத்தையா கண்ணதாசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது.