மத்தியகுழு உறுப்பினர்கள்,
வெளிநாட்டுக் கிளை அமைப்பாளர்கள்,
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,
வெளிநாட்டுக் கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,
ஏனைய உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்/
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி.

தோழமையுடன்,

ஒவ்வொரு வருடமும், ஆண்டின் முதல் நாளில் இருந்து இறுதி நாள் வரையிலும், மரணித்த தோழர்களுக்கு பல வழிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

கழகத்தினதும் கட்சியினதும் சார்பில், வருடாந்தம் வீரமக்கள் தினம் அனுட்டிக்கப்படுவதன் மூலம் அனைத்து தோழர்களும் நினைவுகூரப்படுகிறார்கள். மேலும், அமைப்பின் வலைத்தளங்களிலும் தோழர்கள் மரணித்த நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும், நூறு வீதம் அனைத்து தோழர்களும் நினைவு கூரப்படுகிறார்கள் என்று கூறுவதற்கில்லை. இது கவலையான விடயமாகும். மரணித்த தோழர்கள் பற்றிய முழுமையான தரவுகள்
கைவசம் இல்லாமலிருப்பதே அதன் காரணமாகும். பல தடவைகள் இது பற்றி பேசப்பட்டபோதும், அறிவிக்கப்பட்ட போதும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

2020 ம் ஆண்டிற்கான நாட்காட்டி தயாரிக்கப்பட்ட வேளையில் தரவுகளை பெறுவதற்காக முழு முயற்சி எடுக்கப்பட்டதன் விளைவாகவே , தற்போது அமைப்பின் வலைத்தளங்களில் தொடர்ச்சியாக அஞ்சலிச் செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அவற்றை இன்னும் பூரணப்படுத்தவும், முழுமையான தரவுகளை ஆவணப்படுத்தவும், உங்களிடமோ அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்களிடமிருந்தோ கிடைக்கக்கூடிய, மரணித்த தோழர்களின் விபரங்களை இயலுமானவரையிலும் விரைவாக பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மரணித்த தோழரின் முழுப்பெயர், அமைப்பினால் அவருக்கு வழங்கப்பட்ட பெயர், பிறந்த திகதி, சொந்த இடம், மரணித்த திகதி, மரணத்திற்கான காரணம், மரணம் நடந்த இடம் ஆகிய விபரங்களைக் கொண்டதாக தகவல் இருப்பது நல்லது.

கிடைக்கும் தகவல்களை, கட்சியின் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது நிர்வாகப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

ம. பத்மநாதன்(பற்றிக்)
நிர்வாகச் செயலாளர்
02.01.2022
dplf.plote@gmail.com
plotepatric@gmail.com
WhatsApp 0752278472