தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவுக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்கு சீனாவுக்கு வருகைத்தருவதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு ​கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யீ, இலங்கையின் மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் அங்கு வருகைத்தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு உடனடியான அறிவுறுத்தினார்.