யாழ்ப்பாணம் மணலடைப்பு இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசந்தபுரம் இளவாலையை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத் தோழர் குலசிங்கம் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி முருகன் கந்தி அவர்கள் இன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
12.01.2022.

குறிப்பு: அன்னையின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது வசந்தபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை முற்பகல் 10 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.