மாலைத்தீவின் சபாநாயகரான மொஹமட் நஸீட், இன்று (16) இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று பகல் 12.45 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 504 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மாலைத்தீவு சபாநாயகர் மற்றும் அவருடன் வருகைத் தந்த இரண்டு அதிகாரிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அத்துடன், இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ள மாலைத்தீவு சபாநாயகர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.