மாமூலை, முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கற்சிலைமடு, ஒட்டுசுட்டானை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத்தின் தேசிய அமைப்பாளர் தோழர் தவராஜா மாஸ்டர் அவர்களின் அன்புச் சகோதரியுமாகிய திருமதி வேலாயுதம் பவளம் அவர்கள் இன்று காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
19.01.2022.