சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.