க..பொ.த உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டையை இதுவரை பெறாத விண்ணப்பதாரர் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவரேனும் அனுமதி அட்டையை இதுவரை பெறவில்லை என்றால், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்குச் சென்று, முதற்பக்கத்தில் உள்ள GCE (A / L) பரீட்சை 2021 (பதிவிறக்க அனுமதிச் சீட்டுகள்) ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர், சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது தேர்வு எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் தொடர்புடைய அனுமதி அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.