நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில்  திருத்தம் செய்யப்பட்ட  மின் பிறப்பாக்கிகள் இன்று மீண்டும் பழுதடைந்திருந்தன.

எனினும் நாட்டில் மின் தடை ஏற்படாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு பல பிரதேசங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்தைய செய்தி..

மின்சார விநியோகத்தை விட மின்சாரத்தின் தேவை அதிகமாக காணப்படுவதால் இன்று (01) மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இன்று மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணி நேரம் மின் தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் மின்சாரசபை அறிவித்துள்ளது.