Header image alt text

கிழக்குமாகாண பிரதம செயலாளராக, துசித்த பி.வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (07) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 17 ஆண்களும் 09 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,621 ஆக அதிகரித்துள்ளது. Read more

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. Read more

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட சந்தேகநபர் ஒருவரும் இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும் மற்றைய சந்தேகநபர் 38 வயதுடையவர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more