ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்கள், நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம், இன்று (10) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.