உக்ரைன் நாடு தழுவிய ரீதியில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ளடங்கும்.

இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும். அதன்பின் நீடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், உக்ரைனியர்கள் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது