Header image alt text

வலுசக்தி, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு ஆகிய மூன்று துறைகளில் இலங்கைக்கு உதவுவதற்கு மூன்று நாடுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உறுதியளித்துள்ளன. பிரித்தானியா, தென்கொரியா, எகிப்து ஆகிய நாடுகளே ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அறிவித்துள்ளன.

வாழ்க்கைச் சுமை மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இன்று (31) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மண்ணெண்ணை, பெற்றோல், சமையல் எரிவாயு, பானைகள், மின்சார உபகரணங்கள்  மற்றும் சமையலறை உபகரணங்கள் போன்றவற்றை சுமந்து வந்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹாய பகுதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். Read more

வவுனியா தவசிகுளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் ஒன்று பொலிசாரால் இன்று (31) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. Read more

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு (30)  இடம்பெற்ற வாகன விபத்தில், கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக  பணிபுரியும் 42 வயதான யோதிமணி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். Read more

முல்லைத்தீவு வற்றாப்பளை, நாவற்காடு, முள்ளியவளை ஆகிய இடங்களில் முன்பள்ளி சிறுவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. Read more

BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கை வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸை சந்தித்த போது இந்தியா – இலங்கைக்கு இடையில் மேலும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more

ரயில் கட்டண திருத்தம் உட்பட சில காரணங்களை முன்வைத்து, நாளை (30) முதல் மேலதிக நேர சேவையில் இருந்து விலகுவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்தது. Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வீடொன்றை வழங்க அனுமதிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு – 07, மலலசேகர மாவத்தையில் மைத்திரிக்கு வீடொன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இந்த தீர்மானத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.