அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் 47(2) (அ) பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில், 2022 மார்ச் 03, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அப்பதவிகளில் இருந்து நீக்கிவிட்டார்.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

மேலும், பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொகுகே ஆகியோருக்கு புதிய அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பவித்ரா வன்னியாராச்சி தற்போது போக்குவரத்து அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக உள்ளார்.

மற்றும் காமினி லொகுகே மின்சக்தி அமைச்சராக உள்ளமை குறிப்பிடத்தக்கது