மாஸ்கோ: கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரேன்  அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின்  தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை ஏற்கெனவே, வெளியிட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சகம் அதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது ரஷ்ய ஜனாதிபதி தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, இந்திய மாணவர்கள் உட்ப வெளிநாட்டவரை உக்ரேன் பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவரை உக்ரேன் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

 ரஷ்ய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் நேற்று (03) மாலை பேசிய ஜனாதிபதி புட்டின், “உக்ரேனில் கல்வி கற்கச் சென்ற வெளிநாட்டு மாணவர்களை அந்நாடு பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளது.

கார்கிவ் ரயில் நிலையத்தில் 3,179 இந்திய மாணவர்கள் உட்பட பல வெளிநாட்டவரும் ஒரு நாளுக்கும் மேலாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் அங்கு தான் இருக்கின்றனர். உக்ரேனின் சுமி நகரில் 576 பேர் சிக்கியுள்ளனர். கார்கிவிலிருந்து வெளியேற விரும்பிய சீன நாட்டவர் மீது உக்ரேன்  படைகள் சுட்டுக் காயப்படுத்தியுள்ளன.  இருவர் காயமடைந்துள்ளனர். வெளிநாட்டவரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைப்பதைத் தொடங்கியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.