21.03.2022 இனவெறி ஒழிப்புக்கான சர்வதேச நாள் (International Day of the Elimination of Racial Discrimination)

இனவெறி ஒழிப்புக்கான சர்வதேச நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.

1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப் பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்திற் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டியதுடன்,

1966ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதியை இனவெறி ஒழிப்புக்கான சர்வதேச நாளாக அறிவித்தது.