வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  பிரதான சந்தேகநபர் உட்பட மேலும் இருவர் கைதாகி உள்ளனர். இன்று காலை கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் தந்தை மற்றும் சகோதரரே இவ்வாறு கைதாகி உள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தார்.

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி பிலியந்தலை – மாவித்தர பகுதியில் வைத்து குழுவொன்றினால் நேற்று கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.