கழகத்தின் இராணுவப் பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தோழர் காத்தான் (கிருஷ்ணசாமி கிருஷ்ணகுமார்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.  கழகத்தின் இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த தோழர் சுந்தரத்தின் மறைவுக்குப் பின்னர் கழக இராணுவப் பொறுப்பாளராக பொறுப்பேற்று செயற்பட்டார்.

சிறந்த பயிற்சி ஆசிரியரான இவர் அசாத்திய துணிச்சல் மிக்க போராளியாவார்.

இவர் காந்தீய அமைப்பில் இணைந்து கொண்டு பாரிய பணியாற்றியவர்.

குறிக்கட்டுவான் காவல் நிலையம்மீது தாக்குதல் மேற்கொண்டு முதன் முதலாக ஆயுதங்களைக் கைப்பற்றியவர்.

1982.03.28ல் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, நேரடி மோதலில் மரணமானார்.