திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு (30)  இடம்பெற்ற வாகன விபத்தில், கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக  பணிபுரியும் 42 வயதான யோதிமணி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் மூதூர் – கடற்கரைசேனையை சேர்ந்தவர் என்பதும் குறப்பிடதக்கது.

சம்பூரில்  இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்று மீண்டும் திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண், கிண்ணியா – மட்டக்களப்பு பிரதான வீதியில் உப்பாறு பாலத்துக்கு அருகில்  பயணித்துக் கொண்டிருந்த போது, பின்புறமாக வந்த பஸ் அவரை முந்திச்செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் இதனையடுத்து சம்பவ இடத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,