Header image alt text

ஏப்ரல் 4ஆம் திகதி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை பாடசாலை அதிபர்களே முடிவு செய்யலாம் என கல்வி அமைச்சு கூறுகிறது. Read more

தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும்  இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள், சேவைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும்.  அந்த சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும்  ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மிரிஹானயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 26 பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

அவசரகால நிலைமைப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்ககத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more