கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு- காலி வீதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.