அரசாங்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை (08) இரண்டு மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது.

இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

பொதுமக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பொதுமக்களின் துயரங்களுக்கு தொழிற்சங்கங்களின் ஒற்றுமையைக் காட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாது எனவும் சுகாதார சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

நாடு முழுவதுமுள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிக்காடும் என்றும் தெரிவித்தார்.