வவுனியா சமளங்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் ஆசிரியர் கௌரவிப்பும் இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கட்சியின் நிர்வாகச் செயலாளர் பற்றிக், கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினரும் ஆசிரியருமான சு.காண்டீபன், சமளங்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் சந்திரன், கல்லுமலை பிள்ளையார் ஆலயத் தலைவர் வினோ, அறநெறிப் பாடசாலையின் ஆசிரியைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது அமரர் வை.விஜயநாதன் அவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றதைத் தொடர்ந்து 58 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு, இரு ஆசிரியைகளுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.