இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் ஆணைமடு தேர்தல் தொகுதியின் ஆணைமடு, நவகத்தேகம, பல்லம மற்றும் கருவலகஸ்வௌ பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு நேற்று (11) அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.