உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 735 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 196 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

அத்துடன்,  81 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 493 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.