மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமை பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டே தேர்தல் ஆணைக்குழு குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்கள் உரிய கால கட்டத்துக்குள் செயற்படுத்துவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.