யாழ். சுழிபுரம் நாவலர் சனசமூக நிலையத்தின் வருடப் பிறப்பு விழா நேற்று (17.04.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சுழிபுரம் நாவலர் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவர் இ.காந்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் த.நடனேந்திரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் அதிகாரி திரு.காமினி, கிராம சேவகர் மு.பிரதீபா, கிராம சேவகர் கி.ராஜ்கண்ணா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர் வரவேற்பு, மக்கள விளக்கேற்றல், மங்கல வாத்திய இசை என்பன இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்
அவர்களின்
பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுதிட்ட நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடம் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்
அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இதையடுத்து ஆசியுரை,  வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர் உரைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுக்களும் பிரமுகர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.

அத்துடன் புலமைப்பரிசில்  கா.பொ.த சாதாரண தரம் கா.பொ.த உயர்தரம் ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.