எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று (20) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பருத்தித்துறை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

மேலும், தனியார் பஸ் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்ததாக கூறப்படுகின்றன.

வவுனியா – செட்டிக்குளத்திலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரும் இன்று வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.