யாழ். மானிப்பாய் கட்டுடை கிராமத்தில் அமைந்துள்ள கோபால் பாலர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புத்தக பைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22.04.2022) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது மானிப்பாய் கோபால் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 27 பிள்ளைகளுக்கான புத்தகப்பைகளை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் அவர்கள் வழங்கி வைத்தார்.