ராஜபக்சக்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கங்களை அமைக்கத் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.