பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான விஜேராம இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்  காலி முகத்திடலை வந்தடைந்தனர்.

இதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹட்டனில் இருந்து பாரம்பரிய பறை இசையுடன் வந்திருந்த மலையக இளைஞர்களும் ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தனர்.

4 hours ago

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான விஜேராம இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வௌிப்படுத்தி வருகிறார்கள்.

கொலைக்கார கோட்டா வீட்டுக்குப் போ, அன்று ரத்துபஸ்வல இன்று ரம்புக்கன, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என்கிற வாசகங்களை போராட்டக்காரர்கள் சுவரில் எழுதி வருகிறார்கள்.