அம்பாறை காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் தோழர் பக்தன் (சிவநேசன்) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் நாள் போட்டி காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

கழகத்தின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி (ரவிச்சந்திரன்) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் (திருக்கோவில்) அவர்களும், சிறப்பு விருந்தினராக ஜெயக்குமரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் நாகராஜா(கெங்கா), சமூக சேவையாளர் ஜெயகோபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.