Header image alt text

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக ஜோதிடரான ஞான அக்காவின் வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Read more

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுள் இரண்டு அரசியல்வாதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, திருகோணமலை கடற்படை முகாமை, இளைஞர் குழுவினர் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read more

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.