Header image alt text

12.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர்கள் தாஸ் (செல்லத்துரை சாந்தகுமார்), விந்தன் (தம்பிராஜா துரைராஜா), சாந்தன் (சின்னத்தம்பி சிவநேசன்), ஜூலி (செல்லத்தம்பி பத்மசீலன்), லோரன்ஸ் ஆகியோரின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

Untitled Post

Posted by plotenewseditor on 12 May 2022
Posted in செய்திகள் 

கோட்டகோகம போராட்டம் தொடரலாம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொலிசார் போராட்டக்காரர்களை தொடமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  Read more

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். Read more

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இன்றுமாலை பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பிரதமராக ரணில் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டின் பொறுப்புக்களை பொறுப்பேற்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது. Read more

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது, எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் விசேட அனுமதி பெற்று விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(12) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 14 பேர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார். Read more