ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக்க மற்றும் சமன் லால் பெர்னாண்டோ உட்பட 22 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீ து கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தே மேற்குறிப்பிட்டோரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்

சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சனத் நிசாந்த உள்ளிட்ட 24 பேரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால், பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது வன்முறைகைளை கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.