Header image alt text

துயர் பகிர்கின்றோம்!

Posted by plotenewseditor on 24 May 2022
Posted in செய்திகள் 

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், 07ம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் சுரேஸ் அவர்களின் அன்புத் தாயாருமாகிய மூக்கன் லட்சுமி அவர்கள் நேற்று காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more

துயர் பகிர்கின்றோம்!

Posted by plotenewseditor on 24 May 2022
Posted in செய்திகள் 

திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத் தோழர்கள் வெள்ளை சுரேஸ், ரூபன் (பஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையுமாகிய திரு. சண்முகம் கந்தையா அவர்கள் இன்று முற்பகல் காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விரைவில் நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more

23 புதிய அமைச்சுகளுக்கு 23 செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று நியமித்தார். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதியால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. Read more

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டியை நேற்று (23) சந்தித்தார். Read more

இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பஸ் கட்டணங்களையும் 19.5% ஆல்  அதிகரிக்கப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய ஆகக் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 27 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆகக் கூடிய கட்டணம் 3370 ரூபாயிலிருந்து 4025 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த  உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவில் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. Read more