Header image alt text

30.06.1986இல் யாழ். கைதடியில் மரணித்த தோழர் பார்த்தி (ஏகாம்பரம் பார்த்தீபன் – திருகோணமலை) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், பஸ் கட்டணங்களை 22 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை 32 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 40 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. Read more

முல்லைத்தீவு மாணவிகள் சிலரை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட:டள்ள 28 வயதான ஆசிரியருக்கு எதிரான வழக்கு,  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (30) விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்டப்டுள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் பாராளுமன்ற இணையத் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதியே, இவ்வாறு அவர்களின் முகவரிகள் பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று (30) காலை நாடுகடத்தப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட 46 பேரும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு  நகர் பகுதியில் இன்று பெண்கள் பலர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் வாரங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக, மேற்படி சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். Read more

யாழ். கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாசாலை மாணவன் ஜெ.லக்சிகனின் பாடசாலைப் போக்குவரத்துக்கு உதவும் வகையில் அவருக்கு 48,000/= ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். எழுவைதீவு பத்திமா விளையாட்டுக் கழகத்திற்கு 25,000/= ரூபா நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டது. Read more

29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். Read more