பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தின் போது, பல வீதிகளில் நுழைவதை தடை செய்யுமாறு கறுவாத்தோட்ட பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு தாமரைத் தடாகத்துக்கு அருகாமையில் இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் பொலிஸாரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.