தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை – தயா வீதிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

22 வயதான குறித்த இராணுவ சிப்பாய் தமது கடமை நேர துப்பாக்கியை பிரயோகித்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.