முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் மே. மாதம் 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே இவர், கொழும்பில் வைத்து இன்று (06) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (06) காலை கைது செய்யப்பட்ட அந்த நபர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடையாள அணிவகுப்பில் உட்படுத்துவதற்காக, எதிர்வரும் 8 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.