பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 9 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியில் ஏற்பட்ட வன்முறையில், அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார்.

முதலில் தற்கொலை என கூறப்பட்டு இருந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் இது கொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பல கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது