நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (12) அதிகாலையில் கைது செய்து அம்பாறை பாணமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையினர் சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவழைத்து இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அதில் 6 சிறுவர்கள் 6 பெண்கள் உட்பட 36 பேர் இருப்பதை கண்டுபிடித்து அவர்களை கைதுசெய்து கரைக்கு கொண்டுவரப்பட்டு பாணமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து கடலில் இருந்து படகை வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.