சட்டவிரோதமான முறையில், நாட்டைவிட்டு தப்பியோட முயன்ற மேலும் 64 ​பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்குக் கடலில் வைத்தே இவர்கள், இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 திருகோணமலை கடற்பரப்பில் திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.