இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் P.H.N. ஜயவிக்ரமவிற்கு இடையிலான சந்திப்பு இன்று காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை , உணவு தேவைப்பாடு, அரசாங்க திட்டங்கள் மற்றும் நகர்வுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் திருகோணமலை மாவட்ட உதவி அரச அதிபரும் கலந்துகொண்டிருந்தார்.