Header image alt text

07.07.1991இல் வவுனியா மரக்காரம்பளையில் மரணித்த தோழர் நிசார் (மீரா மொகைதீன் நிசார் – மடவளை) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்க தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா நிராகரித்துள்ளார். Read more

ரயில் நிலைய ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் மீண்டும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் இன்று காலை பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், காலை 11.50 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் விரைவு ரயிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் பல அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை – ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து தொடர்ந்தும்  தங்கியிருப்பதற்கு தயாராக இருப்பதாக நம்பப்படுவதால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய, புதுக்கடை நீதிமன்றம் இந்த தடை உத்தரவை விதித்துள்ளது. Read more