போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.