பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்துக்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.